Wednesday, June 6, 2012

பேனா...




உன்னிடம் சொல்லத்தான் 
ஆசை ஆனாலும் 
பயமாக இருக்கிறது
என்னுடன் பேசாமல் 
விட்டுவிடுவாயோ?? 
என்று யோசிக்கின்றேன் 
என்றாவது உனக்கு 
அது தெரியவரும் 
அப்போது சொன்னால் 
எந்தப் பிரயோசனமும் 
இல்லை என்பது
 உண்மைதான்
கண்ணே எனில்க் 
கோவம் கொள்ளாதே
சொல்கிறேன் உன்னிடம் 
தவறாய் இருந்தால் 
மன்னித்துவிடு
இது வரை இவ்வாறு 
யோசித்ததுகூட இல்லை 
நேற்றுத்தான் இவ்வாறு 
நடந்து விட்டது
சொல்கிறேன்
நீ தந்த பேனாவை எங்கோ தொலைத்துவிட்டேன்...

No comments:

Post a Comment